Total Pageviews

Tuesday, 29 November 2011

அம்மா நல்லவள்


தமிழ்க்கவிதை. I am not a poet. However, sometimes, I am provoked to write something as a reaction, and this time, I chose the form of Tamil poetry to react against the blogpost about Children’s day celebration in A.R.Rajagopalan’s Ayutha ezhuthu blog.  The poem I have sent to the blog is appended below: Children's day is gone, only to come back and haunt children like these.

குழந்தைகள் நாள் வந்தது.
அம்மா சொன்னாள்: “போ. கட்டக்கடைசியில் மிட்டாய் கொடுப்பார்கள்
போனேன்:
சரசரவெனப்பட்டுப்பாவாடைகள்;
கைநிறையப் பலூன்கள்;
புதிய கால்சட்டைகள்;
பளபளக்கும் சட்டைகள்.
என்னைப்போன்ற சிறுவர்களும் சிறுமிகளும்.
வயதில் மட்டுமே.
ஆனால் அவர்கள் வேறு.
கலர்கலரான கார்களில்
அப்பாக்கள் அம்மாக்கள்.
அழகாக இருந்தார்கள்.
குழந்தைகள் இறங்கினர்.
அவர்களுக்கான திண்பண்டங்கள் விற்கும் கடைகள்.
குழந்தைத்தொழிலாளர்கள் சப்ளை செய்தார்கள்.
மினரல் வாட்டர் கொண்டுவந்தார்கள்.
குழந்தைகள் குதூகலித்தார்கள். குடித்தார்கள் பெப்சிக்களையும் கோலாக்களையும்
கோலாக்களை அறைவாசியாக உறிஞ்சிவிட்டு
அடுத்து லேக்குப்போனார்கள்.
என்னால் அவற்றை எடுக்கமுடியவில்லை.
அம்மா திட்டுவாள்.
அம்மா என்னைக் குழந்தைத் தொழிலாளார்களுள் ஒருத்தியாகத் தடுத்துவிட்டாள்.
சொன்னாள்; அவர்கள் கொஞ்சமாத்தான் கூலி கொடுப்பார்களாம் அடிப்பார்களாம்.
கொஞ்சம் பெரிய பொண்ணானால் என்னுடன் வருவே! கூலி நிறையக்கிடைக்கும்மென்றாள்.
இறுதியாக அமைச்சர் பேசினார்:
இந்நாள் பொன்னாள். உங்களுக்கெல்லாம் நன்னாள்.”
கரகோசம். நானும் கைதட்டினேன். ஏனென்று தெரியவில்லை.
எல்லாரும் செய்தார்கள் எனவே.
ஒருவழியாக முடிந்தது. அனைவரும் சென்றபின்
எம்வரிசை. இறுதியில் எனக்கும் மிட்டாய்.
இன்னொன்று வாங்கினால் அம்மாவுக்கும் கொடுக்கலாமே?\
குரக்கழுதை, சின்ன வயசிலேயே திருட்டுத்தனமா?
வாங்கிய மிட்டாயும் பறிபோயிற்று!
இதைசெய்யாதே கண்ணு
என்று அம்மா செல்லமாகத் திட்டினாள்.
அப்பாவிடம் சொல்லாதே என்று மட்டும் கெஞ்சினேன்.
அம்மா நல்லவள்.
ஏன் செய்தேன் என்று அவளுக்குச் சொல்லவில்லை.
காத்திருக்கிறேன்.
பெரியவளாகி கைநிறையக் கூலி வாங்க.
அப்போ நானே மிட்டாய்கள் வாங்கித்தின்பேன்.
அம்மாவுக்கும் கொடுப்பேன்.

--காவ்யா

Friday, 14 October 2011

இருந்தமிழே உன்னால் இருந்தேன் !

“இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்து அமிழ்தம் என்றாலும் வேண்டேன்”

இந்த வரிகளை ஒரு தமிழ்ப்பேராசிரியர் முன்னுரையாகச் சொல்லிவிட்டுத் தன் தலைமையுரையைப் பேசத்தொடங்கினார்:  ‘இவ்வரிகள் எந்த நூலில் சொல்லப்பட்டிருக்கின்றன;  ஆசிரியர் யார் ? என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை.  எழுதியவருக்குத் தமிழ்மேல்தான் என்னே பக்தி! என்னே பாசம்!! 

பேசியவர் அப்போது தில்லிப்பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராயிருந்த திரு பாலசுப்பிரமணியம் என்று நினைவு.
இது நடந்தது தில்லியில் கான்ஸ்டிடியுசன் கிளப்பில் பலவாண்டுகளுக்குமுன் நடந்த ஒரு தமிழ்க் கலைவிழாவில்.  இது எந்த நூலில் உள்ள வரிகள் என்றெனக்கு முன்னரே தெரியும். அந்தப் பேராசிரியருக்குக்கீழ் வேலைபார்க்கும் தமிழாசிரியர் என்னிடம் உரையாட வந்த போது நான் சொன்னேன். அவர் தன் தலைவரிடம் சொன்னாரா என்று தெரியாது. இருக்கட்டும்.

இந்த வரிகள் மனதை மயக்குவன. இவ்வரிகளின் ஆசிரியர் கண்டிப்பாகத் தமிழ்மேல் தணியாக்காதல் கொண்டவர் என்பது தேற்றம். ஆனால், அவர் யார் என்றெவராலும் அறிய முடியவில்லை.  மேலே நான் எழுதிய கண்ணி இன்னூலைப் பிரபலபடுத்தியது. கண்ணியென்றால் ஈரடிகள் கொண்டது பா. இறுதிவரியின் இறுதிச்சொல் மறு கண்ணியின் முதல் வரியாக வரும். அந்தாதி போல. இன்னூல் யாக்கப்பட்ட காலம் 17ம் நூற்றாண்டென ஊகிக்கப்படுகிறது. ஆசிரியர் திருவிளையாடல் புராணத்தில் கூறப்பட்டவைகளை விவரிக்கிறார்; பரஞ்சோதி முனிவர் இயற்றியுள்ள திருவிளையாடல் புராணம் கி.பி 14ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். மேலும், 251ம் கண்ணியில், ‘துரை’ என்ற சொல்லும் இன்னூலில் காணப்படுகிறது 57ம் கண்ணியில் இரட்டையர்கள் பாடிய திருவாமாத்தூர் கலம்பகம் பற்றிய செய்தி குறிப்பிடப்படுகிறது. இவற்றையெல்லாம் கோர்த்துப்பார்க்கும்போது, இந்நூல் 17ம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் எனச் சொல்லமுடியும். உலகுக்குத் தெரியா நூலாகவே இருக்க, உ.வே.சா 1930ம் ஆண்டு முதல் முதலாக இன்னூலை மதுரையில் கண்டெடுத்தார். அவ்வாண்டு இன்னூல் வெளிச்சத்து வந்து தமிழறிந்தோரைப் பரவசத்துக்குள் ஆழ்த்தியது.  

இன்னூல் ஒரு சிற்றிலக்கிய வகை னூல். உலா, பள்ளு போன்று.  தூது இலக்கியம் என்ற வகையில் இது சேரும். தன் காதலனின் அன்பை நாடிப்பெற எதையாவதைத் தூது அனுப்புவதே தூது இலக்கியமாகும்.
பழந்தமிழ் நூல்களிலும், பெருங்காப்பியங்களிலும் தூது பற்றி அமைந்த பாடல்கள் காணப்படினும் அவை சிற்றிலக்கிய வகையுள் ஒன்றான தூது நூலினின்று மாறுபட்டவை. பழம்பாடல்கள் பெரிதும் அரசியற் காரணங்களுக்காகவும், பொருள் இரந்தும், நட்பு நாடியுமே தூதுரைக்கின்றன. காதல் தூதுகள் அரிதாகவே காணப்படுகின்றன.  சீவக சிந்தாமணியில் குணமாலை என்பாள் ஒரு கிளியைச் சீவகனிடம் தூது விடுப்பதாகவும், பெருங்கதையில் உதயணன் ஒரு மானைத் தூதனுப்புவதாகவும் ஓரோவிடங்களில் மட்டுமே காதல் தூதுப்பாடல்கள் கிடைக்கின்றன. பிற்கால நூல்களுள் கலம்பகம் என்னும் சிற்றிலக்கியத்தின் ஓரு உறுப்பாகச் சில தூதுப்பாடல்கள் காணப்படுகின்றன. இவ்வாறே ஆண்டவன் அருள் நாடும் அடியவனின் அருட்காதலை யாசித்துத் தூதனுப்பும் பாடல்களைத் தேவாரம், திருவாசகம், நாலாயிரத் திவ்ய பிரபந்தம் ஆகிய பக்தி இலக்கியங்களுள் காண்கிறோம். பராங்குச நாயகி, ஒரு அன்னத்தை திருக்குறுங்குடி நம்பியிடம் தூதுவிட்டு அவனின் காதலை யாசிப்பதாக நம்மாழ்வார் எழுதும் பாசுரங்கள் வைணவர்களிடையே வெகுப்பிரசித்தம்.

உயர்திணப்பொருட்கள், அஃறிணைப்பொருட்கள் என்று அனைத்தையும் தூதுயனுப்புவார்கள் என்று இந்த வெண்பா சொல்கிறது இலக்கண விளக்க நூற்ப்பா என்ற நூலில்:

“பயில்தரும் கவிவெண் பாவி னாலே
உயர்திணைப் பொருளையும் அஃறிணைப் பொருளையும்
சந்தியின் விடுத்தல் முந்நுறு தூதுஎனப்
பாட்டியற் புலவர் நாட்டினர் தெளிந்தே”

அன்னம், மயில், கிளி, மேகம், மைனா, தோழி, குயில், தன் நெஞ்சம், தென்றல், வண்டு ஆகிய பத்துமே தூது செல்ல உகந்தவை என்று இப்பழந்தமிழ்ப்பாடல் சொல்கிறது இரத்தினச்சுருக்கம் என்ற் நூலில்:

“இயம்புகின்ற காலத்து எகினம்மயில் கிள்ளை
பயம்பெறு மேகம்பூவை பாங்கி – நயந்த குயில்
பேதை நெஞ்சம் தென்றல் பிரமரம் ஈரைந்தும்
தூதுரைத்து வாங்கும் தொடை” 
எகினம் = அன்னம்.

(இதன் இரண்டாம் பாகம் வரும்.)

Tuesday, 11 October 2011

டெல்லியில் தென்னிந்திய உணவகங்கள்

இவ்வார தமிழ்மணம் நட்சத்திர பதிவாளர் வெங்கட் நாகராஜின் மேற்கண்ட தலைப்பில் எழுதப்பட்ட பதிவில் நான் பின்னூட்டம் போட்டால் ஏறமாட்டேன்கிறது. எனவே அப்பின்னூட்டம் ஒரு பதிவாக நான் இங்கே போடுகிறேன்.


Andhra Bhawan restauant s locted at Ashoka Road near India Gate. There full unlimited meals for Rs 90. NV items extra. Taste varies every day. If u go early, u get good food i.e. u shd go around 12 noon. Thereafter, quality deteriorates: recycled food only. Utensils r not washed thoroughly. But they warmly welcome u. Once u purchased ur coupon, u r their valued customer.

No south Indian hotel today in Sarojini Nagar. Karnataka Bhawan hotel in Moti Bagh, South Delhi, is hygienic and boasts of better ambiance but the cost of items s prohibitive. Quality s like any Udipi hotel. They don't know how to fry pappaadam (appalams). Coffee s so-so.

In Saravana Bhawan the cost s intimidating and the service discriminatory. Waiters focus only on north Indian customers for generous tips. Tips gathering s done in a crude manner: they wait like vultures; the moment u close the tips book; they pounce on it.

Aware of the fact that Madrasis or Tamilians don't offer generous tips, the watiers don't care for them. Only first serve and then the waiters don’t come near even if u signal them. The food s not as in their Chennai counterparts.

Andhra Bbawan and Saravana Bhawan prove the mercantile fact that once a brand s established, cheating begins.

Venkat does not know about restaurants serving Kerala food. There r many in Delhi. They serve kerala food moderate priced as if all keralites r mdoest. Nivedhanam the Kerala restaurant in Hauz Khaz s popular. Don't miss their Onam feast.

In Kerala House, which s walkable distance from Jantar Mantar, u get full and unlimited meals for just Rs. 35. NV items extra. Don’t fear to enter. It s open to all. No discrimination. Food s targeted at low income groups. But enough for anyone who want to have stomach full, with rasam, pappadam, two koottus, matta rice, buttermilk and pickle - all Kerala style. The low cost s due to waiver of all kinds of local duties to State Houses. If u r on an educational tour, take ur pupils straight to Kerala House for economical meals. 

Venket mentions Jantar Mantar and Mathews. But they r kaiyendhi bhawans. Mathews adjoining Tamil Sangam in R.K.Puram s poor in quality, recycled sambar. He re-uses same sambar old and new mixed. But his parotta kuruma s better, just for Rs 25 per plate of 2 parottas. His customers r previously all Tamilians, and now, only North Indians and a few Tamilians. Resident Tamilians eating out s a rare sight here. .

For Jantar Mantar restaurant, although a kaiyendhi bhawan, I shall give first rank. The cost of the items s like in Chennai. Affordable. Taste s like in Chennai. Sambar s given any no of times u like. Cooks r Tamilians.  The place is a sort of Hyde Park of London. In democracy in action: during parliament sessions, so many agitations: Vijaya Kanth asking for protection to fishermen; hunger strikes of Delhi University students to save the three facing noose in Rajiv case; Telengana agitation etc. Travel to the Jantar Mantar picnic spot and then, walk in the side road to reach it. Till night 1030 pm it s open. Don’t miss this kaiyendhi bhawan if u r a budget traveller. A further walk for a few minutes will take u to the aforesaid Kerala Bhawan.

In Munirka, all hotels r unhygienic and accommodated in claustrophobic dungeons in narrow alleys difficult to locate. Better to avoid them if you want good food. But they r godsends for eaters like students living away from homes who subsists on monthly allowances from parents. If u have the policy i.e. food s to fill stomach, nothing else, go there. Talking of students, I remember the eatery at Venkateshwara College, Daula Khan, South Delhi.  Fantastic.  Low prices. Don’t miss it.  Similar one in Tamil school Mandhir Marg. Cheap and mouth-watering dosas and vadais.

Ramanujam s closed. When they served, in quality, they r a great match to any high class hotels of Tamilnadu. Their coffee and evening tiffins - Oh my God - r heavenly. But it has become a thing of the past. It s forever closed. All good things should come to end one day, goes the proverb, doesn’t? Anna, Kamaraj, Ira Chezian, Vaiko - all such Tamil parliamentarians were regulars there and brought back to TN lovely memories. Ramanujam r philanthropists too. During the massacre of Sikhs in 1984, for 3 days, all markets and eateries r closed. Ramanujams served food to their regular customers keeping open the back door entry secretly  - FOR FREE! Karol Bagh was the worst affected area then.

Delhi and New Delhi r finished so far as Madrasi migration s concerned. Those who r living there now came here decades ago like Venkat. Now, the new comers proceed to NOIDA in UP and Gurgaon in Haryana, bordering Delhi, where I think, such restaurants r slowly coming up.  Hopefully, Venkat will travel there to explore and delight us with a detailed blog post.

....







Sunday, 25 September 2011

“இலக்கியவாதிகளின் அடிமைகள்”


பாவலர்கள், நாவலாசிரியர்கள், நாடகாசிரியர்கள், சிறுகதையாசிரியர்கள் போன்று எழுத்து மூலத்தைக் கொண்டவர்கள் இலக்கியவாதிகள்சிலர் கட்டுரைகளும் வரைவார்கள்.   இவர்கள் தங்கள் இளம் வயதில் எழுதத் தொடங்குகிறார்கள்பின்னர் அவர்களுள் சிலர் விட்டு விடுவார்கள் வேலை, குடும்பம் என்றாகி விடும்போதுசிலர் தொடர்கிறார்கள்சிலர் உண்மையிலேயே இலக்கியத்தரம் வாய்ந்த படைப்புக்களினால் பேர் பெறுகிறார்கள்சிலர் அரசியலில் நுழைந்து பேர் பெற்று அப்பேரைத் தம் படைப்புக்களைப் பரவலாக்கப் பயன்படுத்துகிறார்கள்சிலர் எதிரும் புதிருமான கருத்துக்கள வெளியிட்டு ஒரு நெகட்டிவ் பப்ளிசிட்டியைப் பெற்றுக் கொண்டு நிலைக்கிறார்கள்சிலர் பாடல்களின் பெருந்தத்துவங்களை அழகு தமிழில் சொல்லித் தன் ஆளுமையையும் அப்பாடல்களில் சொன்னது போல இருக்கும் என்பதாக மக்களை மயக்குகிறார்கள். இவர்களில் திரைப்பட பாடலாசிரியர்கள் உண்டுஇவர்கள் திரைப்படக் கதாநாயகர்களைப் போல புகழ் பெறுகிறார்கள்

இன்று இவர்களில் சிலர் வலைப்பதிவுகளில் எழுதுகிறார்கள். தாங்களாகவே வலைபதிவுகளைக் கணணி வல்லுனர்களின் மூலம் அட்டகாசமாக வடிவமைத்து  எழுதி வருகிறார்கள்ஏற்கனவே இவர்களில் இரசிகர்கள் இங்கே குழுமுகிறர்கள்ஒரு 'கல்ட்' (cult) உருவாக்கப்படுகிறதுஇரசிகர்கள் இவர்களின் ஒவ்வொரு பதிவையும் விழுந்து விழுந்து படிக்கிறார்கள்ஆதரிக்கிறார்கள். பதிவை எதிர்ப்போரை அடியாட்கள் போல நின்று தாக்குகிறார்கள்.

இதெல்லாம் பரவாயில்லை. இவ்வெழுத்தாளர்கள் தங்கள் பாப்புலாரிட்டியப் பயன்படுத்தி ஒரு சார்பு நிலையைப் போற்றியும் இன்னொரு சார்புனிலையை இகழ்ந்தும் எழுதுகிறார்கள். இரசிகர்களின் சிந்தனையை ஓர்வழிப்படுத்துகிறார்கள். (radcalisation).  

எழுத்தாளர்கள் தங்கள் கற்பனைத்திறமையில் புதினங்களைப் படைத்து தங்களுக்கென ஒரு இடத்தைப் பிடித்தபின், ஒரு பிராண்டு நேமை (brand name) பெற்றுவிடுகிறார்கள். அதன் பின் அப்படிப்பட்ட பிராண்டு நேமுள்ள எழுத்தாளர் என்ன எழுதினாலும் மக்களில் பலர் படிக்கிறார்கள். சிலர் படிக்குமுன்பே அப்படைப்பு உயர்வாகத்தான் இருக்கும் என முடிவுகட்டி விடுகிறார்கள். அவ்வெழுத்தாளரின் படைப்பு விவாதக்களங்களில் பேசப்படுகிறது.  எனவே புகழ் ஒரு படைப்பின் தரத்தை நிர்ணயிக்கிறது.

இதெல்லாம் பரவாயில்லை. ஆனால் அவ்வெழுத்தாளர் சமூகப்பிரச்சினைகளில் கலந்து ஒரு முடிவை வைக்கும்போது அது போற்றப்படுகிறது. அந்த முடிவு சரியா இல்லையா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து தேர்ந்தெடுக்கும் தன்மையை, வன்மையை, வாசகர்கள் பரிகொடுத்து விடுகிறார்கள். அவ்வெழுத்தாளர் சொன்னவை மாபெரும் தத்துவங்களாகிறது. எடுத்துக்காட்டாக, ஜெயகாந்தன் சொன்னதாக ஒருவர் திண்ணையில் எழுதியது: மரண வீடுகளில் சம்பிரதாயத்துக்காகத்தான் அழுகிறார்களாம் !

எழுத்தாளர்கள் எல்லாரும் அறிவாளிகளல்ல. முட்டாள்களுமல்ல.   நம்மைப் பொறுத்தவரை 'எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்பதை உணரவேண்டும்.  எழுத்தாளரின் பார்வையில் ஒரு வாழ்க்கைத் தத்துவம் அப்படியென்றால், நாம் பார்த்த வாழ்க்கை நமக்கு என்ன கற்றுத் தந்தது எனபதையறியும்போது  அஃது  எழுத்தாளன் சொன்னது அவனுக்கு மட்டுமே சரியாகலாம் என்ற படிப்பினையை நமக்குப் பலவேளைகளில் தரும்.

நாமே நம் எண்ண உலகில் நடுக்கரு. Man is the measure of all things. You are the nucleus, and everything revolves around you. நம்மிலிருந்தே வாழ்க்கையை நோக்க வேண்டும்.

எழுத்தாளர்களின் புதினங்களைப் படிப்போம். நன்றாக இருந்தால் போற்றுவோம். அதற்கு மேல் அவர்களிடம் போய் 'எங்களுக்கு வாழ்க்கைத் தத்துவங்களைச்' சொல்லித்தாருங்கள்; அல்லது நீங்கள் சொன்னவை அனைத்துமே போற்றத் தகுந்த வாழ்க்கைத் தத்துவங்கள் என்றெல்லாம் சொல்லி மாய்வது, உங்களுக்கென்று ஒரு ஆளுமையே இல்லை அல்லது சுயசிந்தனையே இல்லை என்றுதான் பொருள்.

Saturday, 24 September 2011

சவால் விடும் விட்டலன்கள் !

தேவராஜ் விட்டலன், பெரியார் தளம், மற்றும் புதிய தென்றல் - இவர்களில் பதிவுகள் தொடர்ந்து முன்பக்கம் தெரிகின்றன. விட்டலனின் பதிவு "ஜெயமோகனுக்கு எழுதிய கடிதம்",  15 நாட்களுக்கு மேலாக இருந்த இடத்திலேயே தெரிகிறது.  இதைப்பற்றி நான் ஏற்கனவே எழுதியாயிற்று.  டோண்டு ராகவன் என்றொரு பதிவாளரும் சொல்லிவிட்டார். இதை இவர்கள் எப்படி செய்கிறார்கள் ?

இவர்கள் கணனி நுட்ப திறமையைப் பயன்படுத்தி தங்கள் பதிவை எப்போதும் தமிழ்மணத்தில் நாள்தோறும் தோன்றும் வண்ணம் செய்து வருகிறார்கள்.  அவர்களில் பதிவு தொடர்ந்து பல நாட்களாக புதிய பதிவுகளில் நடுவிலேயே நின்று கொண்டேயிருக்க,. மற்றவர்களின் பதிவுகளோ தோன்றி புதுப்பதிவுகளால் கீழே தள்ளப்பட்டு ஆர்க்கைவுக்குச் சென்று விடுகின்றன.  .

தமிழ்மணம் எல்லாப் பதிவர்களுக்கும் சமமானது என்பதை இப்படிப்பட்ட பதிவர்கள் தகர்க்க நினைக்கிறார்கள  இவர்கள் தமிழ்மணத்துக்குச் சவால் விடுவதாகவே எனக்குத் தெரிகின்றது.

Friday, 23 September 2011

இவர்கள் என்ன எல்லாரும் பாரதியார்களா?.!



பாரதியார் ஒரு வேறுபாடான பாவலர்.

தானிலிருந்து பிறப்பதுதான் இலக்கியம் என்போர் பலர். தானைவிட்டு விலகும்போதே சிறப்பான இலக்கியம் வரும் என்போரும் பலர்.

இவ்விரண்டு முனைகளிலிருந்து நாம் ஒரு தமிழ்ப்பாவலனைப் பார்க்கும் போது, இந்த வகையில் சிலரும், அந்த வகையில் பலரையும் பார்க்கலாம்.

எடுத்துகாட்டாக, பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் தான்மை கலக்காப் பொதுவுடமைக் கருத்துக்களைச் சொல்லும். பாரதிதாசன் தான்மை கலந்து தார்மீகக்கோபம் கொண்டாலும் அஃதெல்லை மீறாது.

பாரதியாரின் கதை வேறு.

இயற்கையைக்கூட அவரால் குழந்தையைப் போல இரசிக்க முடியாது. அதிலும் ஒருவகையான அரசியலைக் கலந்துதான் பார்ப்பார்.

காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்.

இதில் சொல்ல வந்த கருத்து, “மனிதா, உங்களுக்குள்ளேயே வேறுபாடு பார்த்து ஒருவரை ஒருவர் வெறுக்கிறாய். நான் உங்களை விட மேல்படியில் ஏறி உலகத்தைப் பார்க்கிறேன். எனக்கு இயற்கையும் என் ஜாதி அதாவது மனிதர்கள் அனைவரும், மற்றும் காணும்பொருள்களெல்லாம் என் ஜாதி. நான் பேதம் பார்ப்பதில்லை என்கிறேன்.”

கருத்து உயர்வே என்பதில் இரு கருத்துகளுக்குமிடமில்லை. ஆனால் அதை நான் இங்கு பேசவில்லை. பேசுவது அவரின் இயலாமையேதன்னை விலக்காமல் அவருக்கு வாழ்க்கையில்லை.

இப்படியாக அவர் பாக்களெல்லாம் தான்மை விரவியிருந்தபடியே அவரின் சிறப்பான கருத்துக்கள் தமிழ் உலகுக்குச் சொல்லப்பட்டன. இதில் அவருக்கு ஒரு பிரச்சினையென்ன வென்னவென்றால், அவரால் இயல்பாக வாழ முடியவில்லை.; காண்பதெல்லாம் குறைவுகளில் தோயாமல் இல்லை என்பதே அவர் கட்சி. எனவே தன் சுற்றம், தன் இனம், தன் ஜாதியார், என்று ஒரு குற்றங்குறை பார்க்கும் பாவலர் ஆகி விட்டார்அவர் ஒரு மிஸ்ஃபிட் எனலாம்.

இப்படிப்பட்ட ஆளுமையிலே தன்னை உணர்ந்ததால், அவர் தன்னைப் பிறரிடமிருந்து மாறானவன் என்பதை உள்வாங்கி, தான் ஆயிரம்பேரில் ஒருவனாக காணாமல் போக மாட்டேன் எனவும் தன் சாதனைகள் எனக்கு எட்ட முடியும் எனவும் சொல்வதாக இப்பாடல் பாடுகிறார்

தேடிச்சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக வுளன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போல - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ

மற்றும் என்னை அருளுடன் படைத்து விட்டால் நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ என்றும் கேட்டுக்கொள்கிறார்.

இஃதெல்லாம் அவருக்குப் பொருந்தும். மற்றவருக்கும் பொருந்துமா ? எல்லாரும் தேடிச்சோறு நிதம் என்றுதான் இருக்கமுடியும். சின்னஞ்சிறு கதைகள் பேசாமல் தாம்பத்திய வாழ்க்கையோ குடும்ப வாழ்க்கையோ நட்பு வட்டாரமோ இல்லை. வாடித் துன்பமடைகிறோம். கிழப்பருவமெய்தி போகிறோம். இதிலன்ன தவறு? எல்லாரையும் இறைவன் எதையாவது சாதிக்கவேண்டுமென்பது கட்டாயமென்றானா ? ஏன் ஒரு நல்ல கணவனாகவோ,மனைவியாகவோ, தகப்பனாகவோ, தாயாகவோ இருக்கக் கூடாது ?

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு பெண்ணிடம் என்ன வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்க வேண்டியவர்கள் கேட்கும்போது, வீட்டுப்பெண், (ஹவுஸ் வைஃப்) என்று லஜ்ஜையுடந்தான் பதில் சொல்கிறாள்!. இதுபோல பலரும்.

ஏன் எல்லாரும் சாதனை சாதனை என்று பொருந்தா முடியா இலட்சியங்களோடு அலைய வேண்டும்? ஏன் ஒரு பள்ளியாசிரியையாக இருப்பது லஜ்ஜையான விசயம் ? ஒரு அரசு அதிகாரியாக இருப்பது உயர்வான விசயம்?

இத்தகைய எண்ணங்கள் எனக்கு வருகின்றன பல பதிவர்கள் மேலே சுட்டிக்காட்டிய பாரதியாரின் பாடலை தம் இலட்சியமாகப் போட்டுக் கொண்டு எழுதுவதைப் படிக்கும்போது.

இவர்கள் என்ன எல்லாரும் பாரதியார்களா? இல்லை அவர் போல கட்டாயம் ஆகத்தான் வேண்டுமா ? இல்லை அவருக்குச் சரி, நமக்கு சரியா என்பதெல்லாம் சிந்தித்தார்களா ?

இன்னொரு பதிவில் அப்பதிவாளரின் இலட்சியம் இதுவாம

" வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக"

இதை எப்படி இவர் செய்யப்போகிறார் என்று தெரியவில்லை. செய்து விட்டால் அட்லீஸ்டு இவரை நாம் தமிழக முதல்வராக்கி தமிழ்நாட்டில் சாதி சாதிச்சண்டைகளை ஒழிக்கலாம்.

இன்னொரு பதிவரோ, தன்னை பாரதியாரின் பயங்கரவாதி என்கிறார். அதாவது பாரதியாரில் இலட்சியங்கள் அனைத்தையும் தீவிரமாகப் பின்பற்றுகிறாராம். பதிவில் காதல் கவிதைகள் மட்டுமே போட்டு வருகிறார்.

இவர்களை என்ன சொல்வது ? ஒன்று சொல்லலாம். பள்ளியில் படிக்கும்போது வாழ்க்கை இப்படித்தான் இருக்கவேண்டும் என கனவு, பெரியவரானதும் அக்கனவுகள் வெறுங்கனவுகளே என பறந்தோடிப் போய் விடுகின்றன‌. வாழ்க்கையின் எதார்த்தங்கள், கசப்பான உண்மைகளைப் உய்த்துணர்ந்து மாறிக்கொள்கிறோம்.

மாறவில்லையென்றால் ?

இப்படிதான், பாரதியாரின் 'தேடிச்சோறு' பாவைப் பாராயணம் செய்தி நித்தம் நித்தம் பூஜையறையில் ஓதிக்கொள்ளலாம்.