Total Pageviews

Showing posts with label தமிழ் பதிவர்கள்.. Show all posts
Showing posts with label தமிழ் பதிவர்கள்.. Show all posts

Saturday, 24 September 2011

சவால் விடும் விட்டலன்கள் !

தேவராஜ் விட்டலன், பெரியார் தளம், மற்றும் புதிய தென்றல் - இவர்களில் பதிவுகள் தொடர்ந்து முன்பக்கம் தெரிகின்றன. விட்டலனின் பதிவு "ஜெயமோகனுக்கு எழுதிய கடிதம்",  15 நாட்களுக்கு மேலாக இருந்த இடத்திலேயே தெரிகிறது.  இதைப்பற்றி நான் ஏற்கனவே எழுதியாயிற்று.  டோண்டு ராகவன் என்றொரு பதிவாளரும் சொல்லிவிட்டார். இதை இவர்கள் எப்படி செய்கிறார்கள் ?

இவர்கள் கணனி நுட்ப திறமையைப் பயன்படுத்தி தங்கள் பதிவை எப்போதும் தமிழ்மணத்தில் நாள்தோறும் தோன்றும் வண்ணம் செய்து வருகிறார்கள்.  அவர்களில் பதிவு தொடர்ந்து பல நாட்களாக புதிய பதிவுகளில் நடுவிலேயே நின்று கொண்டேயிருக்க,. மற்றவர்களின் பதிவுகளோ தோன்றி புதுப்பதிவுகளால் கீழே தள்ளப்பட்டு ஆர்க்கைவுக்குச் சென்று விடுகின்றன.  .

தமிழ்மணம் எல்லாப் பதிவர்களுக்கும் சமமானது என்பதை இப்படிப்பட்ட பதிவர்கள் தகர்க்க நினைக்கிறார்கள  இவர்கள் தமிழ்மணத்துக்குச் சவால் விடுவதாகவே எனக்குத் தெரிகின்றது.