Total Pageviews

Showing posts with label நம்பிக்கைகள். Show all posts
Showing posts with label நம்பிக்கைகள். Show all posts

Monday, 19 September 2011

மரணங்களில் ஓலமிட்டு அழலாமா ?

கண்ணதாசனின் “அர்த்தமுள்ள இந்து மதம்” என்ற நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு பகுதி: (கடைசிப்பகுதி ‘உன்னையே நீ அறிவாய்’ என்ற தலைப்பில்) இங்கு கீழே கொடுக்கிறேன்:
“நம்பிக்கையுள்ளவனுக்கு எந்த்த் துன்பத்திலும் ஒரு நிம்மதி இருக்கும்.
அதாவது, ‘எல்லாம் ஆண்டவனுடைய இயக்கம், நடப்பது நடக்கட்டும்’ என்று துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளும் சக்தி அவனுக்கு வந்து விடும்.
பிராமண வீடுகளில், ஒருவர் இறந்து போனால், உடனே அந்தச்சடலத்தைத் திண்ணையிலோ அல்லது வெளி வராந்தாவிலோ தூக்கிக்கொண்டு வந்து போட்டு விடுகிறார்கள்.
நான் அறிந்த வரையில், மரணத்திற்காக அவர்கள் அதிகம் ஓலமிடுவதில்லை; கதறி அழுவதில்லை. காரணம், அவர்களுடைய பகுத்தறிவு தெளிவாகச் சொல்லிவிட்ட்து. ‘மரணம் தவிர்க்க முடியாத்து’ என்று.
அந்தச் சமூகத்தில்தான், அறிவாளிகள் அதிகம் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்.
வைதிக, மத நம்பிக்கையும் அந்தச்சமூகத்தில்தான் அதிகம்.
அவர்கள், இன்ப துன்பங்களைச் சம்மாக்க் கருதுவதைப் பார்க்கும்போது மத நம்பிக்கையுள்ள பகுத்தறிவு வாழ்க்கையை எவ்வளவு நிம்மதியாக ஓட்டிச் செல்கிறது என்பது புரிகிறது.
ஆகவே, ஒவ்வொரு மனிதனுக்கும் மத நம்பிக்கை வேண்டும்.
மனிதன், மனிதனாக வாழ, மத நம்பிக்கை வேண்டும்.  மனிதர்கள் மிருகமாக ஆகாமல் இருக்க, மத நம்பிக்கை வேண்டும்.”