Total Pageviews

Wednesday 7 September 2011

நினைவூட்டல்.

தமிழ்மணம் கவனிக்க‌ !

சில பதிவர்கள் கணனி நுட்ப திறமையைப் பயன்படுத்தி தங்கள் பதிவை எப்போதும் தமிழ்மணத்தில் நாள்தோறும் தோன்றும் வண்ணம் செய்து வருகிறார்கள்.  அவர்களில் பதிவு தொடர்ந்து பல நாட்களாக புதிய பதிவுகளில் நடுவிலேயே நின்று கொண்டேயிருக்கிறது. மற்றவர்களின் பதிவுகளோ தோன்றி புதுப்பதிவுகளால் கீழே தள்ளப்பட்டு ஆர்க்கைவுக்குச் சென்று விடுகின்றன.  .

எடுத்துக்காட்டாக தேவராஜ் விட்டலன் என்பவரின் பதிவு எப்போதும் நடுவிலேயே நிற்கிறது. இப்போது அவரிட்டிருக்கும் "ஜெயமோகனுக்கு நான் எழுதிய கடிதம்" என்ற பதிவு இரண்டு நாட்களாகத் தொடர்ந்து நடுவில் நின்று கொண்டேயிருக்கிறது.  எப்படி அதைச் செய்கிறார் என்பது கணனி வல்லுனர்களுக்கேத் தெரியும்.

தமிழ்மணம் எல்லாப் பதிவர்களுக்கும் சமமானது என்பதை இப்படிப்பட்ட பதிவர்கள் தகர்க்க நினைக்கிறார்கள். இதைப்பற்றி நான் ஏற்கனவே தமிழ்மணத்துக்குத் தனிமடல் எழுதியும் தேவராஜ் விட்டலனின் பதிவு தொடர்ந்து அசையாமல் இரண்டாவது நாளாக நிற்பதனால், இப்படி நானே ஒரு பதிவு போட்டுத் தமிழ்மணத்தை எச்சரிக்கை செய்யவேண்டியதாகிறது.

5 comments:

Unknown said...

இந்த குறுக்கு வழியை எல்லோரும் பயன்படுத்தினால் என்னாகும்?தமிழ்மணம் களைய வேண்டிய குறைகள் நிறைய உள்ளது சகோ.

காவ்யா said...

நன்றி. எலான்.

தமிழ்மணம் வாசகர்களிடமிருந்து பின்னூட்டங்களைப் அப்போதைக்கப்போது பெற்று வந்தால், அத்திரட்டியின் குறைகளென்ன எனத் தெரிய வாய்ப்புண்டு. மாறாக, அவர்கள் வாசகர் தனிமடலில் சொன்னால் கூட கண்டுகொள்ள் மறுக்கிறார்கள். ஒருவாரமாக விட்டலனின் ஒரே பதிவு நடுவில் நிற்கிறது.

Avargal Unmaigal said...

இந்த பதிவிற்க்கான தலைப்பை மாற்றி மீண்டும் பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன் அப்போதுதான் எல்லோறையும் சென்று அடையும். இது என் கருத்து. உதாரணமாக தலைப்பை தமிழ்மணத்தில் தனிமனிதர்களின் ஆதிக்கம் இது போன்று மற்றவர்களின் கவனத்தை கவரக்க் கூடிய தலைப்பாக வையுங்கள். பதிவிற்கு தலைப்பு மிக அவசியம்

SURYAJEEVA said...

திரட்டிகளில் இணைக்காத பதிவர்கள் எத்தனையோ நபர்கள் இருக்கிறார்கள் என்று counsel for any வலை பதிவில் குறிப்பிட்டிருந்தீர்கள்... அவர்கள் பற்றி உங்களுக்கு நிறைய தெரிந்திருக்கிறது என்பதால் அது போல் யார் கவனத்தையும் கவராத வலைபதிவுகளின் தொகுப்பை உங்கள் வலைபதிவிலோ அல்லது அந்த வலை பதிவுகளின் சுட்டிகளை எனக்கு மினஞ்சல் மூலமாகவோ அல்லது இங்கேயே இதே கட்டுரையில் பின்னூட்டமாகவோ போட முடியுமா தோழி?
jeevansure@gmail.com

வருண் said...

TamilmaNam has offered an explation and it is obvious it is not the fault of the particular blog or blogger and it is a misunderstanding between TM and the "accusers" like Kavya and dondu!

Why dont you two (Kavya and dondo) sincerely apologize for your bullshit of accusing some innocent bloggers with your own "THEORY" which failed already?

TM never said it is those bloggers fault. But you two were accusing them as if you knew they did something really wrong or they were guilty.

Are you going to eat what you throw-up or going to apologize to them?? Choose wisely!