Total Pageviews

Sunday 28 August 2011

குழந்தைகளும் சமூகப்போராட்டங்களும்



அன்னா ஹாஜாரேவின் உண்ணாவிரதப்போராட்ட மேடை குழந்தைகளால் நிரம்பியதுஇன்று (28.8.2011) காலை அவர் உண்ணாவிரதம் ஒரு சிறு குழந்தையால் முடித்துவைக்கப்பட்டது.


குழந்தைகள் வீடுகளில் பெற்றொரின் அன்பரவணைப்பிலும் பள்ளிகளில் கல்வி கற்கவும்தான் செய்ய வேண்டும். அரசியல் சமூகச் சிந்தனைகள் அவரகளுக்குத் தேவையில்லைஇதைக்கருத்தில் கொண்டே பள்ளிப்பாடங்கள் எதையும் அடித்தளத்திலிருந்து அக்குவேறு ஆணிவேறாகப்பிரித்து உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாக எழுதப்படுவதில்லை.   10ம் வகுப்பிலிருந்தும் கூட அவர்கள் உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பும் பாடங்கள் எழுதப்படவில்லை. உண்மைகள் உள்ளவாறே அப்படியே சொல்லப்படும்.


ஆனால் ஹசாரே அதைப்பற்றியெல்லாம் சற்றும் சிந்திக்காமல் குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைத்து விட்டார். அல்லது பெற்றோர்கள் செய்கிறார்கள்வாழ்க்கையில் ஊழல் இருக்கிறது. அதைப்பற்றிப் பள்ளிக்குழந்தைகள் பெரியவர்களானதும் தெரிந்து கொள்வார்கள்டொனேசன் கொடுத்துத்தான் உன்னைப்பள்ளியில் சேர்த்தேன் என்று ஏன் உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லவேண்டும் ? குழந்தையா அதைச்செய்யச் சொன்னது? உங்கள் தவறுகளால் ஊழல் பெருகி தாங்கமுடியாமல் போனால், அதை எதிர்த்து நீங்கள்தானே போராடவேண்டும் ?



பெரியவர்களும் இளைஞர்களும் கலந்துகொள்ள வேண்டிய அரசியல் சமூகப் போராட்டங்களில் குழந்தைகளைச் சேர்ப்பது அவர்களைப் பிற்காலத்தில் ஒருமுகப்பார்வை கொண்டவர்களாக  ஆக்கவும் தேர்ந்து சிந்தித்துத் தாமாகவே ஒரு நல்ல முடிவெடுக்கும் திறனாளிகளாக உருவாவதை ஆக்காமல் தடுக்கவும் ஏதுவாகும். நம் நாடு ஒரு தீவிர சிந்தனையாளர்களைக் கொண்ட நாடாக மாறும்இப்படிப்பட்ட தீவிரவாதிகள் தங்களுக்குத் தேவையென்றுதானே மதங்கள் குழந்தைகளைச் சிறுவயதிலே மதத்தைப்பற்றிய ஞானத்தைத் திணித்துப் தம்மதமே உயர்ந்தது பிற மதங்கள் வெறுக்கப் படவேண்டும் என்று மதக் கலவரங்களை உருவாக்கி வெற்றி பெற்று வருகின்றன..



மதவுலகத்தில் நடப்பது போல பிறவிடங்களிலும் நடந்து உலகச் சமுதாயமும் நம்மிந்தியச் சமுதாயமும் பாழாய்ப் போகுமென்று தெரிந்தும் தெரிந்தும் அன்னா ஹஜாரே மாதிரி ஆட்கள் இப்படிக் குழந்தைகளை தம் போராட்டத்தில் கலந்துகொள்ள வைக்கலாமா ?



இன்னும் சொன்னப்போனால், இது குழந்தைகளைக் கெடுத்தல் (Child abuse) என்ற குற்றப்பிரிவில் சேர்க்கப்பட்டு இப்போராட்டக்காரர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட‌ வேண்டும்.

                                                                                  ....

2 comments:

periyar said...

காவ்யா,

நீங்கள் குழந்தையாக இருந்த போது எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை தானே?இருந்தும் ஏன் இப்படி பிரிவினை பேசும் திராவிட இன வெறி கொண்டு அலைகிறீர்கள் என்று சொல்ல முடியுமா?

காவ்யா said...

குழந்தைகள் அரசியல் சமூகப்பிரக்ஞைகள் இல்லாமல் வளர வேண்டும். குழந்தைப்பருவம் ஒரு இனிமையான கவலைகளில்லாப்பருவம். அப்படியே இருக்கவிடுவது பெற்றொர் மற்றோரின் கடமை. சின்னஞ்சிறார்கள் ஜாதி, மத, இன உணர்வுகளில்லாமல் வளர வேண்டும். பெரியவர்களானதும் அவர்கள் வழிகளை அவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். சிறுவயதில் ஏன் அவர்களை நாம் காயப்படுத்தவேண்டும் என்பதே என்பதிவு. பிரதமர் செங்கோட்டை உரையில் அரசியல் சமூகப்பிரச்சினகளைப்பற்றித்தான் பேசுகிறார். ஆனால் பள்ளிச்சிறார்கள் காலை 5 மணிமுதல் 12 மணிவரைக்கும் செங்கோட்டையில் அடைத்துவைக்கப்படுகிறார்கள். மானில அமைச்சர்கள் பேச்சுக்களிலும் குழந்தைகள் கட்டாயப்படுத்தி அழைத்துவரப்படுகிறார்கள். மூவரைத்தூக்கலிடக்கூடாதென்ற தெருப்போராட்டங்களுக்கும் அழைத்துவரப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு என்ன தெரியும் ? ஏன் இப்போது தெரிய வேண்டும்? குழந்தைப்பருவம் மகிழ்ச்சியாக இருக்கட்டுமே ? இதைப்பற்றி உங்கள் கருத்தைச்சொல்லுங்கள் போதும்.